வெங்கடத்ரி சமஸ்தானம்

நிகழ்வுகள்

தொகு
தமிழர் பொருளீட்ட வேங்கடம் தாண்டிச் சென்றனர்
பொருளீட்டச் சென்ற சங்ககாலத் தமிழர் வேங்கடமலைக் காடுகளைக் கடந்து சென்றனர்.[13]
வேங்கடத்தில் விழா
வேங்கடத்தில் நாள்தோறும் விழா நடக்கும்[14]
வேங்கடத்துக்கு வடக்கில் ஒரு பஞ்சம்
வேங்கட வரைப்புக்கு வடக்கில் இருந்த வடபுலம் பசியால் வாடியபோது அப்பகுதியில் வாழ்ந்த கல்லாடனார் தன் குடும்பத்துடன் பொறையாற்றுக்கிழானிடம் வந்து தன் வறுமையைப் போக்கிக்கொண்டார்.[15]
மொழிபெயர் தேயம்
வேங்கடத்துப் பனிபடு சோலையில் யானை மரா மரத்தின் உரிஞை (பட்டையை) உரிக்குமாம். அப்படி உரிக்கும்போது அதன் காய்கள் மழை பெய்யும்போது விழும் ஆலங்கட்டிகள் (பனிக்கட்டிகள்) போல நெல் காய்ந்துகொண்டிருக்கும் பாறைமீது சிதறுமாம். இதனைத் தாண்டிச் சென்றால் தமிழ் பெயர்ந்து பேசும் நாடு வந்துவிடுமாம்.[16]
வடுகர் தேயம்
வேங்கடத்தைத் தாண்டிச் சென்றால் வடுகர் தேயம் இருக்கும்.[17]
மக்கள்

தொகு
புல்லி நாட்டில் புளிச்சோறு விருந்து
புல்லி நாட்டில் ஆனிரை மேய்ப்போர் பசுக்களுடன் மேயும் காளைகளின் கழுத்தில் புளிச்சோற்றை மூங்கிலில் அடைத்துக் கட்டித் தொங்கவிட்டுருப்பர். அப் பகுதியின் வழியே செல்லும் புதியவர்களுக்குக் காதடைக்கும் பசி தீரத் தேக்கிலையில் பங்கிட்டுக் கொடுப்பர். [18]
வேங்கடத்துக் குடவர் பாலொடு தினையரிசிப் பொங்கல் விருந்து
வரகை உரலில் இட்டு, உலக்கையால் குற்றி, சுளகால் நேம்பி, தேங்காய் போல் வெண்ணிறம் கொண்ட அரிசியாக்கி, இளஞ்சுனையில் முகந்துவந்த நீரோடு அடுப்பில் ஏற்றி, பொங்கி, அந்நாட்டில் வாழ்ந்த குடவர் வளர்த்து உதவும் ‘நல்லான்’ (பசு) பாலொடு வந்த விருந்தினர்களுக்கெல்லாம் உண்ணத் தருவார்களாம். [19]
கல்லா இளையர்
வேங்கடத்தில் வாழ்ந்த கல்லா இளையர் மராஅம் பூவைத் தலையில் சூடிக்கொண்டு களிற்றை வீழ்த்துவர். மராமர நாரால் அவற்றைக் கட்டி விழாக் கொண்டாடும் நியம மூதூருக்குக் கொண்டுவந்து நறவு விற்கும் கள்ளுக்கடையில் கள்ளுக்கு விலையாகக் கட்டுவர். இதன் அரசன் “கல்லா இளையர் பெருமகன் புல்லி”